கோவை : கோவை வெள்ளலூர் பஜனை கோவில் வீதியை சேர்ந்த சமூக ஆர்வலர் சக்திவேல் மாவட்ட ஆட்சியர் கு.ராஜாமணியிடம் தன்னை ஒரு வருடத்திற்கு மாவட்ட ஆட்சியராக நியமித்தால் சம்பளமின்றி ஆட்சி பணி மேற்கொண்டு லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்பேன், என கூறி மனு அளித்தார்.
கோவை : கோவை வெள்ளலூர் பஜனை கோவில் வீதியை சேர்ந்த சமூக ஆர்வலர் சக்திவேல் மாவட்ட ஆட்சியர் கு.ராஜாமணியிடம் தன்னை ஒரு வருடத்திற்கு மாவட்ட ஆட்சியராக நியமித்தால் சம்பளமின்றி ஆட்சி பணி மேற்கொண்டு லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்பேன், என கூறி மனு அளித்தார்.
இது குறித்து அவர் கூறுகையில்:
கோவை மாவட்டத்தில் அனைத்து அரசாங்க அலுவலங்களில் அரசு நிர்ணயம் செய்த தொகையை விட அதிகம் வசூலிப்பதாகவும், லஞ்சம் பெறுவதாக கூறினார். கேபிள் டிவி கட்டணம், மதுபான கடை, முதியோர் உதவி தொகை பெற என பல்வேறு வகையில் லஞ்சம் பெறபடுவதாகவும் வெள்ளலூர் பேரூராட்சியில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து தகவல் அறிக்கை கேட்டால் ஏளனமாக பார்ப்பதாகவும் அங்கு வரும் பொதுமக்களை மோசமாக நடத்துவதாக தெரிவித்தார்.
எனவே, மாவட்ட ஆட்சித்தலைவர் தன் அதிகாரத்தின் கீழ் தன்னை ஒரு வருடம் ஆட்சி தலைவராக நியமித்தால் சம்பளம் பெறாமல் பணி செய்து லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்பேன் எனவும் எனவே ஆட்சியர் தன்னை ஒரு வருட காலம் ஆட்சித்தலைவராக பணியாற்ற உத்தரவு பிறபிக்க வேண்டும் என மனு அளித்தார்.
இது குறித்து அவர் கூறுகையில்:
கோவை மாவட்டத்தில் அனைத்து அரசாங்க அலுவலங்களில் அரசு நிர்ணயம் செய்த தொகையை விட அதிகம் வசூலிப்பதாகவும், லஞ்சம் பெறுவதாக கூறினார். கேபிள் டிவி கட்டணம், மதுபான கடை, முதியோர் உதவி தொகை பெற என பல்வேறு வகையில் லஞ்சம் பெறபடுவதாகவும் வெள்ளலூர் பேரூராட்சியில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து தகவல் அறிக்கை கேட்டால் ஏளனமாக பார்ப்பதாகவும் அங்கு வரும் பொதுமக்களை மோசமாக நடத்துவதாக தெரிவித்தார்.
எனவே, மாவட்ட ஆட்சித்தலைவர் தன் அதிகாரத்தின் கீழ் தன்னை ஒரு வருடம் ஆட்சி தலைவராக நியமித்தால் சம்பளம் பெறாமல் பணி செய்து லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்பேன் எனவும் எனவே ஆட்சியர் தன்னை ஒரு வருட காலம் ஆட்சித்தலைவராக பணியாற்ற உத்தரவு பிறபிக்க வேண்டும் என மனு அளித்தார்.